ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

1988ல் வெளிவந்த படம் 'குரு சிஷ்யன்'. ரஜினிகாந்த், பிரபு, கவுதமி, சீதா, சோ ராமசாமி ஆகியோர் நடித்த இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். மீனா பஞ்சு அருணாசலம் தயாரித்தார். இளையராஜா இசையமைத்தார். பாண்டியன், ராதாரவி, ரவிச்சந்திரன், செந்தாமரை, வினுசக்ரவர்த்தி, மனோரமா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்தப் படத்திற்கு ரஜினிகாந்த் 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருந்தார். படத்தின் பாடல் காட்சிகள் மைசூரில் உள்ள பிருந்தாவன் கார்டனில் நடந்து வந்தது. ரஜினி, கவுதமி பாடிய பாடலை படமாக்கிய பிறகு இரண்டாவது நாயகனான பிரபு சீதா ஆடிய பாடல் படமாக்கப்பட்டது.
இந்த பாடல் காட்சி படமாகும் போது ரஜினிகாந்த் தனது அறையிலேயே இருக்க வேண்டிய நிலை வந்தது. அப்போது எஸ்பி முத்துராமன் "நீங்கள் வேண்டுமானால் சென்னை சென்று விட்டு வாருங்கள். அதற்குள் இந்த பாடலை முடித்து விடுகிறேன்" என்று சொன்னார். அதற்கு ரஜினி "நான் இந்த படத்திற்கு 25 நாட்கள் தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். நீங்கள் எனது இரண்டு நாட்களை வீணாக்க வேண்டாம். யோசித்து முடிவெடுங்கள்" என்று கூறியுள்ளார்.
அதற்கு எஸ்பி முத்துராமன் "பரவாயில்லை நான் சொன்ன தேதிக்குள் படத்தை முடித்து விடுவேன் நீங்கள் போய் வாருங்கள்" என்றார்.
மறுநாள் சீதா, பிரபு ஆடிய பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது ரஜினிகாந்த் அங்கே வந்தார். "சம்பளம் வாங்கி விட்டு சும்மா அறையில் இருப்பதை விரும்பவில்லை. அதனால் இன்றும் நாளையும் எனக்கு ஏதாவது ஒரு வேலை கொடுங்கள் நான் செய்கிறேன்" என்று ரஜினி கூறினார்.
இதை பார்த்து ஆச்சரியமடைந்த எஸ்.பி.முத்துராமன் "உங்களுக்கு என்ன வேலை பிடிக்கிறதோ அதை செய்யலாம்" என்றார். "நான் உங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றுகிறேன்" என்று கூறிவிட்டு ரஜினி அந்த இரண்டு நாட்களும் பிரபு ஆடியோ பாடல் காட்சிக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார். அந்தப் பாடல் 'வா வா வஞ்சி இளமானே...'




