இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் |
சலார் படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாக வேலைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்ததாக ஜூனியர் என்டிஆரை வைத்து தான் இயக்கும் புதிய படத்தின் வேலைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். அதேபோல நடிகர் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து, தான் நடித்து வந்த வார் 2 படத்தின் வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்ததாக பிரசாந்த் நீல் படத்தில் இணைய இருக்கிறார். அவருக்கும் தேவரா படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் இருந்தாலும் பிரசாந்த் நீல் படத்தில் தான் முதலில் கவனம் செலுத்த இருக்கிறார்.
இந்த படத்திற்கு டிராகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பிரித்விராஜ், பிரசாந்த் நீல் பற்றி கூறும்போது இந்த படம் குறித்து சில விஷயங்களை பேச்சு வாக்கில் வெளியிட்டு விட்டார். அதாவது இந்த படத்திற்கு டிராகன் தான் டைட்டில் என்று கூறியுள்ள பிரித்விராஜ், மலையாள நடிகர் டொவினோ தாமஸும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவலையும் கூறியுள்ளார். ஏற்கனவே நடிகர் பிஜூமேனன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் என்கிற தகவல் மட்டும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரை உலகில் அடியெடுத்து வைக்கிறார் நடிகர் டொவினோ தாமஸ்.