டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதா. வில்லன் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர். நாடகங்களிலும் சாதனை படைத்தவர். அவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் தொழில் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மோதல் இருந்தது. இதன் உச்சகட்டமாக எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டார் எம்.ஆர்.ராதா. அதன்பிறகு எம்.ஜி.ஆர் சரியாக பேச முடியாமல் தவித்தார். எம்.ஆர்.ராதாவுக்கு சிறை தண்டனை கிடைத்தது.
எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா, எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க போவதாக சொல்லி வந்தார். இப்போது எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா மோதலை மையயமாக கொண்டு வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கக் போவதாகவும், எம்.ஆர்.ராதாவாக நடிக்க சரியான நடிகரை தேடிக் கொண்டிருப்பதாகவும் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராதிகா தெரிவித்திருக்கிறார்.




