மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தமிழ் சினிமா சரித்திரத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். மெல்லிசை மன்னர் என்று புகழப்பட்ட அவர் கர்நாடக சங்கீதத்திற்குள் முடங்கி இருந்த திரைப்பாடல்களை வெகுஜன மக்களுக்கான இசையாக மாற்றியவர். தென்னிந்திய மொழிகளில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார்.
தமிழ் இசை அமைப்பாளர் என்று எம்.எஸ்.விஸ்வநாதன் அறியப்பட்டாலும் அவர் ஒரு மலையாளி. கேரளாவின் எலப்புள்ளி கிராமத்தில் 1928 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பிறந்தவர். தனது மண்ணின் மைந்தன் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மணி மண்டபம் கட்ட கேரள அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக முதல் கட்டடமாக ஒரு கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. இந்த நினைவு மண்டபம் அவர் இசை படித்து வளர்ந்த பாலக்காட்டில் கட்டப்படுகிறது.