காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
இளையராஜா கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வந்தது போன்று கே.வி.மகாதேவன் திரையிசையில் கோலோச்சி கொண்டிருந்த காலத்தில் வந்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. காலத்தால் அழிக்க முடியாத பல காவியப் பாடல்களைத் தன் இசையமைப்பில் அளித்தவர் கே.வி.மகாதேவன். ஒரு கட்டத்தில் மாகாதேவனுக்கு வாய்ப்புகள் குறைந்து விஸ்நாதன் - ராமமூர்த்திக்கு அந்த வாய்ப்புகள் சென்றன.
இந்த நிலையில் கே.வி.மகாதேவன் இசையமைப்பில் வெளியான படங்களில் நடித்த எம்ஜிஆர் தனது அடுத்த படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனை இசை அமைக்கச் சொல்லி அணுகினார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் ஆசைதான். ஆனால் அவர் தன் தாயிடம் இதுபற்றி கூறிய போது அவரது தாயார் விஸ்வநாதன் கன்னத்தில் பளார் என்று அரைந்தாராம். "மகாதேவன் தொடர்ந்து இசையமைக்கும் கம்பெனிகளுக்கு நீயேன் இசையமைக்க ஒப்புக் கொள்கிறாய்? அது கூடாது, அவர் இசை உலகின் மாகாதேவன், அவரை உன்னால் வெல்ல முடியாது, ஆனாலும் முயற்சி செய்” என்றாராம்.
இந்த தகவலை எம்.எஸ்.விஸ்வநாதன் மேடை நிகழ்ச்சி ஒன்றில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அப்படிப்பட்ட கே.வி.மகாதேவனுக்கு இன்று 23வது நினைவு நாள்.