3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா |
கொரோனா ஒமிக்ரான் அலை சற்றே குறைந்திருப்பதால் பிப்ரவரி மாதத்திற்கான புதிய தளர்வுகளை மாநில அரசு நேற்று அறிவித்தது. அதன்படி இன்று முதல் இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதனால், தினசரி 4 காட்சிகளை இனி தியேட்டர்களில் நடத்த முடியும். எனவே, புதிய படங்களை வெளியிடுவதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.
பொங்கலுக்கு வெளிவர வேண்டிய அஜித் நடித்துள்ள 'வலிமை', மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தின் முதல் முக்கிய வெளியீடாய் விஷால், டிம்பிள் ஹயாதி நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' பிப்ரவரி 4ம் தேதி வெளியாக உள்ளது. சூர்யா, பிரியங்கா மோகன் நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' பிப்ரவரி 15க்குப் பிறகு வெளியாகலாம். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்துள்ள 'டான்' படம் 'வலிமை' வெளிவந்த இரண்டு, மூன்று வாரங்களுக்குப் பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட படங்களின் வெளியீட்டுத் தேதிகள் பற்றி உறுதியாகத் தெரிந்த பின்தான் மற்ற தமிழ்ப் படங்களின் வெளியீட்டுத் தேதிகளைப் பற்றி முடிவு செய்வார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம். மார்ச் மாதம் முதல் வாரத்திற்கு நான்கைந்து படங்களுக்கு மேல் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.