ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மாநாடு படத்திற்குப் பிறகு சிம்புவின் திரைவாழ்க்கையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு மற்றும் கொரோனா குமார், பத்து தல என சில படங்களில் நடிக்க வருகிறார் சிம்பு. இந்த நிலையில் ஈஸ்வரன் படத்தில் ந டித்து வந்தபோது அப்பட நாயகி நிதி அகர்வாலுக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் தற்போது அவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருவது போலவும் கோலிவுட்டில் ஒரு கிசுகிசு பரவிக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளை காதலித்த சிம்பு சில மாதங்களிலேயே அந்த காதலை முறித்துக் கொண்டார். இந்நிலையில் மூன்றாவதாக நிதி அகர்வாலை காதலிப்பதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. என்றாலும் சிம்புவின் இந்த காதலாவது கைக்கூடி கல்யாணத்தில் முடிய வேண்டும் என்று அவரது அபிமானிகள் வேண்டிக்கொண்டு வருகிறார்கள்.