சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தர்ஷன். சமீபத்தில் அவரது படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பொது இடத்தில் கலந்துகொண்டபோது கூட்டத்திலிருந்த நபர் ஒருவர் தர்ஷன் மீது செருப்பை வீசியுள்ளார். இந்த நிகழ்வு கன்னட திரையுலகில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கும் தர்ஷனுக்கும் இடையே இருப்பதாக சொல்லப்படும் கருத்து வேறுபாடு காரணமாக, புனித் ராஜ்குமார் ரசிகர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் கிச்சா சுதீப்பின் கண்டன அறிக்கையும் வெளியாகி உள்ளது.
இந்த அறிக்கையில் சுதீப் கூறும்போது, “கன்னட திரையுலகம் தற்போது மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாராட்டிப் பேசப்படும் அளவிற்கு மிகப்பெரிய இடத்தை தொட்டுள்ளது. ஆனால் இப்போது நடந்துள்ள சம்பவம் கன்னடர்கள் என்றால் இப்படித்தான் என்கிற ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிடும் அபாயம் இருக்கிறது. எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு. அந்த தீர்வை ஏதோ ஒரு விதத்தில் நாம் பெற்றுக்கொள்ள முடியும். பொது இடத்தில் ஒருவரை அவமானப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று.
புனித் ராஜ்குமாருக்கும் தர்ஷனுக்கும் இடையே ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நான் அவர்கள் இருவரையும் நன்கு அறிவேன். அவர்களுக்குள் எந்த விதமான பகையும் இருந்ததில்லை. அதை மனதில் வைத்துக்கொண்டு புனித் ரசிகர்கள் யாரோ இப்படி செய்துள்ளனர். இதுதான் நீங்கள் புனித் ராஜ்குமார் மீது காட்டும் மரியாதையா? அவர் இருந்திருந்தால் நீங்கள் இப்படி செய்திருப்பதை வரவேற்று இருப்பார் என்று நினைக்கிறீர்களா? அன்பையும் மரியாதையும் பரப்புவோம்.. மற்றவர்களிடமிருந்து நாமும் அதையே திரும்பப் பெறுவோம்” என்று கூறியுள்ளார் கிச்சா சுதீப்.