Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

29 ஜூலை, 2025 - 03:40 IST
எழுத்தின் அளவு:
Supreme-Court-refuses-to-dismiss-Manjummel-Boys-producers-anticipatory-bail-plea

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் வெளியானது. குறைந்த பட்ஜெட்டில், பெரிய அளவில் பிரபலம் இல்லாத நடிகர்களை வைத்து உருவான இந்த படம் கேரளாவில் மட்டுமல்ல தமிழகத்திலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சவுபின் சாஹிர் தான் இந்த படத்தை தனது சகோதரர் மற்றும் நண்பர் ஆகியோருடன் இணைந்து தயாரித்திருந்தார்.

அதேசமயம் எர்ணாகுளத்தை சேர்ந்த சிராஜ் வலயதாரா ஹமீது என்பவர் இந்த படத்தின் தயாரிப்பு செலவுக்காக தான் 7 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் படத்தில் கிடைக்கும் லாபத்தில் 40 சதவீதம் தனக்கு தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், ஆனால் அந்தத் தொகையை கொடுக்காமல் தன்னை தயாரிப்பாளர்கள் மோசடி செய்து விட்டார் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு குறித்த போலீசாரின் விசாரணைக்கு ஆஜரான சவ்பின் சாஹிர் நீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதன்படி செய்வதற்கு தாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

ஆனாலும் இந்த மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என்பதால் முன் ஜாமின் கோரி இருந்தார். அவருக்கு முன் ஜாமீனும் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் அவரது முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து நீதிமன்றம் இது ஒன்றும் அவசரகதியில் எடுத்து விசாரிக்கப்பட வேண்டிய கிரிமினல் வழக்கு அல்ல.. அவர்களின் முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டியதற்கான அவசியம் எதுவும் இல்லை என்று கூறி புகார்தாரரின் மனுவை தள்ளுபடி செய்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல்தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் ... வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in