தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஹிந்தியில் அமீர்கானின் மகன் ஜுனைத்கானுடன் 'ஏக் தின்' என்ற படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி, அதையடுத்து 'ராமாயணா' படத்தில் சீதா வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் அவர் நடித்துள்ள சீதாதேவி கதாபாத்திரம் தற்போது வட இந்திய நெட்டிசன்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதோடு இந்த வேடத்தில் அவர் நடிப்பது ராமாயணா காவியத்தை அவமதிப்பது போல் இருப்பதாக கூறி வருகிறார்கள். அது மட்டுமின்றி இதே படத்தில் சூர்ப்பனகையாக நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் போன்ற நடிகைகளுடன் சாய்பல்லவியை ஒப்பிட்டு எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
குறிப்பாக ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ள இந்த படம் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் வெளியானதை அடுத்து ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இப்படி எதிர்மறையான கருத்துக்கள் வெளியான போதும் அதற்கு எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் ராமாயணாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி. இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துவிட்ட நிலையில், தற்போது இரண்டாவது பாகத்திற்கான வேலைகளை தொடங்க தயாராகி வருகிறார். அதோடு இதுவரை தான் நடித்த படங்களை விட இந்த படத்திற்காக கூடுதலான அர்ப்பணிப்பை சாய் பல்லவி செலுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.