கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் | தயாரிப்பாளர் ஆனார் ஆண்ட்ரியா : மாஸ்க் படத்தில் வில்லத்தனமான கேரக்டர் | பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிக்க ஆசை ; பாக்யஸ்ரீ போர்ஸ் |

ஹிந்தியில் அமீர்கானின் மகன் ஜுனைத்கானுடன் 'ஏக் தின்' என்ற படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி, அதையடுத்து 'ராமாயணா' படத்தில் சீதா வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் அவர் நடித்துள்ள சீதாதேவி கதாபாத்திரம் தற்போது வட இந்திய நெட்டிசன்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதோடு இந்த வேடத்தில் அவர் நடிப்பது ராமாயணா காவியத்தை அவமதிப்பது போல் இருப்பதாக கூறி வருகிறார்கள். அது மட்டுமின்றி இதே படத்தில் சூர்ப்பனகையாக நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் போன்ற நடிகைகளுடன் சாய்பல்லவியை ஒப்பிட்டு எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
குறிப்பாக ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ள இந்த படம் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் வெளியானதை அடுத்து ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இப்படி எதிர்மறையான கருத்துக்கள் வெளியான போதும் அதற்கு எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் ராமாயணாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி. இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துவிட்ட நிலையில், தற்போது இரண்டாவது பாகத்திற்கான வேலைகளை தொடங்க தயாராகி வருகிறார். அதோடு இதுவரை தான் நடித்த படங்களை விட இந்த படத்திற்காக கூடுதலான அர்ப்பணிப்பை சாய் பல்லவி செலுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




