புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா. இவர் தற்போது கோவாவில் உள்ள மாண்ட்ரோம் பகுதியில் பிரமாண்ட சொகுசு பங்களா ஒன்று கட்டி வருகிறார். சுமார் 100 கோடி மதிப்பில் இந்த பங்களா உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த பங்களா விதிமுறைகளை மீறி கட்டப்படுவதாக புகார் எழுந்தது. உள்ளூர் சமூக நல ஆர்வலர்கள் இது குறித்து புகார் கூறி வந்தார்கள்.
இந்த நிலையில் கோவா பஞ்சாயத்து அதிகாரி அமித் சாவந்த் நாகர்ஜுனாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‛1994ம் ஆண்டின் பஞ்சாயத்து சட்டப்படி மாண்ட்ரோம் பகுதியில் புதிய கட்டடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே உரிய அனுமதி இன்றி கட்டப்பட்டும் கட்டட பணிகளை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரம்பரியமான மாண்ட்ரோம் பகுதியில் புதிய கட்டடம் கட்டப்படக்கூடாது என்று விதிமுறை இருந்தும் அரசு அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு கட்டட பணிகளை கண்டு கொள்ளவில்லை. கடந்த ஒரு வருடமாக பணிகள் நடந்து வரும்போது இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இப்போது எதிர்ப்பு அதிகரித்தவுடன் கண்துடைப்புக்காக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர், என்று அங்குள்ள சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.