Advertisement

சிறப்புச்செய்திகள்

இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மிமிக்ரி கலைஞர்கள் சங்கத்திற்கு நன்கொடை வழங்கிய சுரேஷ்கோபி

20 ஜூன், 2022 - 03:31 IST
எழுத்தின் அளவு:
Suresh-Gopi-donated-Rs.2-lakhs-to-dubbing-artist-association

மலையாள திரையுலகில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. இடையில் அரசியலில் களம் இறங்கியவர், சில காலம் நடிப்பை விட்டு ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் முழுமூச்சாக களமிறங்கியுள்ள சுரேஷ்கோபி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் நடித்த காவல் என்கிற படம் வெளியான நிலையில் அடுத்ததாக பாப்பன், ஒத்தக்கொம்பன் உள்ளிட்ட சில படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் புதிதாக ஒரு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சுரேஷ்கோபி. இது அவரது 255 வது படமாகும். இந்த படத்திற்காக தனக்கு கிடைத்த அட்வான்ஸ் தொகையிலிருந்து ரூபாய் இரண்டு லட்சத்தை மிமிக்ரி கலைஞர்கள் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் சுரேஷ்கோபி. இதற்கான காசோலையை பிரபல இயக்குனரும் அதேசமயம் மிமிக்ரி கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினருமான நாதிர்ஷாவிடம் வழங்கியுள்ளார் சுரேஷ்கோபி.

இப்போது மட்டுமல்ல, தான் ஒவ்வொரு புதிய படம் ஒப்புக்கொள்ளும் போதும் மிமிக்ரி கலைஞர்கள் சங்கத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் நன்கொடை வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார் சுரேஷ்கோபி. சினிமாவிற்குள் நுழையும் முன்பாக சுரேஷ்கோபியும் மிமிக்ரி கலைஞராக இருந்தவர்தான் என்பதும் அதனால் அவர்களது சிரமங்கள் தனக்கு நன்றாகவே தெரியும் என்பதால் அவர்களுக்கு தொடர்ந்து நன்கொடை வழங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாலியல் வழக்கை வாபஸ் பெற ஒரு கோடி பேரம் : நடிகை பரபரப்பு புகார்பாலியல் வழக்கை வாபஸ் பெற ஒரு கோடி ... தந்தையர் தினத்தில் நடிகர் மதுவை சந்தித்த மோகன்லால் தந்தையர் தினத்தில் நடிகர் மதுவை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in