சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
மலையாள திரையுலகில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. இடையில் அரசியலில் களம் இறங்கியவர், சில காலம் நடிப்பை விட்டு ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் முழுமூச்சாக களமிறங்கியுள்ள சுரேஷ்கோபி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் நடித்த காவல் என்கிற படம் வெளியான நிலையில் அடுத்ததாக பாப்பன், ஒத்தக்கொம்பன் உள்ளிட்ட சில படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் புதிதாக ஒரு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சுரேஷ்கோபி. இது அவரது 255 வது படமாகும். இந்த படத்திற்காக தனக்கு கிடைத்த அட்வான்ஸ் தொகையிலிருந்து ரூபாய் இரண்டு லட்சத்தை மிமிக்ரி கலைஞர்கள் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் சுரேஷ்கோபி. இதற்கான காசோலையை பிரபல இயக்குனரும் அதேசமயம் மிமிக்ரி கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினருமான நாதிர்ஷாவிடம் வழங்கியுள்ளார் சுரேஷ்கோபி.
இப்போது மட்டுமல்ல, தான் ஒவ்வொரு புதிய படம் ஒப்புக்கொள்ளும் போதும் மிமிக்ரி கலைஞர்கள் சங்கத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் நன்கொடை வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார் சுரேஷ்கோபி. சினிமாவிற்குள் நுழையும் முன்பாக சுரேஷ்கோபியும் மிமிக்ரி கலைஞராக இருந்தவர்தான் என்பதும் அதனால் அவர்களது சிரமங்கள் தனக்கு நன்றாகவே தெரியும் என்பதால் அவர்களுக்கு தொடர்ந்து நன்கொடை வழங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.