தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது அறிமுக நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்தார். சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் தப்பிச் சென்ற விஜய்பாபு தற்போது திரும்பி வந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பந்தப்பட்ட நடிகையின் சம்மத்துடன் தான் எல்லாம் நடந்தது. தற்போது திடீரென புகார் அளித்துள்ளார். இதற்கு பின்னால் சதி உள்ளது. கோர்ட்டில் நான் நிரபராதி என்று நிரூபிப்பேன் என்று விஜய்பாபு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த அந்த நடிகை, வழக்கை வாபஸ் பெற விஜய்பாபு தரப்பில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: புகாரை வாபஸ் பெறுமாறு விஜய்பாபுவின் நண்பர் என்னிடம் பேசினார். நான் மறுத்துவிட்டேன். ஒரு கோடி ரூபாய் வரை தருவாகவும் அவர் சொன்னார். புகாரை வாபஸ் பெற மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டேன். என்று கூறியிருக்கிறார்.