ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி |
மலையாள முன்னணி நடிகரான திலீப், பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார். அதன்பிறகு நடிகை கடத்தப்பட்ட வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகளை கொல்ல திட்டமிட்டார் என்றும், இதற்காக அவர் ஜாமீனில் விடுதலையானதும் ஒரு முக்கிய நபரை சந்தித்து திட்டம் தீட்டினார் என்றும் மலையாள இயக்குனர் பாலசந்திரகுமார் புகார் அளித்தார்.
இதனால் நடிகை கடத்தல் வழக்குடன் திலீப் மீது கொலை சதிதிட்ட வழக்கும் தொடரப்பட்டது. இது தொடர்பாக போலீசார் பாலசந்திரகுமாரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் திலீப்பின் நண்பரும், நட்சத்திர ஓட்டல் அதிபருமான சரத்நாயரை போலீசார் கைது செய்தனர். சரத்நாயரும், திலீப்பும் சேர்ந்த கொலை சதி திட்டம் தீட்டியதற்கான ஆதாரத்தை பாலசந்திரகுமார் போலீசிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கொலை சதி வழக்கு தீவிரமடைந்துள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர், தற்போதைய மனைவி காவ்யா மாதவன் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த வழக்கில் திலீப் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.