''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! |
தமிழில் 'கல்யாண சமையல் சாதம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆர்எஸ் பிரசன்னா இயக்கத்தில், ஆமிர்கான், ஜெனிலியா மற்றும் பலர் நடிப்பில் உருவான ஹிந்திப் படம் 'சிதாரே ஜமீன் பர்' கடந்த வாரம் வெளியானது. படத்திற்கு விமர்சகர்களும், சினிமா பிரபலங்களும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
படத்தைப் பார்த்த தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, “சிதாரே ஜமீன் பர்…மிகவும் பிரகாசமாக இருக்கிறது…இது உங்களை சிரிக்க வைக்கும், அழ வைக்கும், கைதட்ட வைக்கும்…ஆமிர்கானின் அனைத்து கிளாசிக் படங்களைப் போலவே, நீங்கள் புன்னகையுடன் வெளியேறுவீர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று நாட்களில் இப்படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக பாலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆமிர் நடித்து கடைசியாக வெளிவந்த 'லால் சிங் சத்தா' படம் தோல்விப் படமாக அமைந்த நிலையில் இந்தப் படம் வியாபார ரீதியாகவும் வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளது.