பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் தலைப்பு நாளை மறுதினம் நவம்பர் 15ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட விழாவில் அறிவிக்கப்பட உள்ளது.
தற்காலிகமாக 'குளோப் ட்ராட்டர்' என்ற தலைப்பில் அப்படத்தின் வேலைகள் நடந்து வருகின்றன. ஐதராபாத் புறநகரில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சுமார் 50 ஆயிரம் பேர் நிகழச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
100 அடி உயரம், 130 அடி அகலம் கொண்ட பிரம்மாண்டத் திரை மேடை மீது அமைக்கப்பட உள்ளதாம். இவ்வளவு பிரம்மாண்டமான திரைப்பட விழா இதுவரையில் நடந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு நடத்த உள்ளார்களாம்.
விழா குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ராஜமவுலி. அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். காவல்துறையின் ஆலோசனைப்படி 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கும், வயதானவர்களுக்கும் அனுமதி இல்லை. சமீபத்தில் விஜய்யின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது, ஆந்திராவில் கோவில் நெரிசலில் நடந்த உயிரிழப்புகள், டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஆகியவற்றை வைத்து கடும் கட்டுப்பாடுகளை காவல் துறை விதித்துள்ளது. அவற்றைப் பின்பற்றுமாறு ராஜமவுலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.