காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் துனிஷா சர்மா. தற்போது 20 வயதாகும் அவர் அலிபாபா தாஸ்தென் இ- காபுல் என்ற ஹிந்தி டிவி தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மும்பை அருகிலுள்ள ராம்தேவ் என்ற ஸ்டுடியோவில் இந்த தொடரின் படப்பிடிப்பில் நடித்து வந்தார் துனிஷா சர்மா. படப்பிடிப்பு இடைவெளியின் போது மேக்கப் அறைக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அறைக் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பட குழுவினர், போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார், துனிஷா சர்மாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராமில், ‛இந்த தருணத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். அதுவே வாழ்வில் போதும்' என்று பதிவிட்டு இருக்கும் துனிஷா சர்மா, நேற்று தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, ‛தங்கள் பேரார்வத்தால் உந்தப்படுபவர்கள், எந்த இடத்திலும் நின்று போக மாட்டார்கள்' என்றும் கடைசியாக தனது ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
காதலர் கைது
இந்த நிலையில் துனிஷாவின் தாயார் அளித்த புகாரின் பேரில், துனிஷாவின் காதலர் ஷீசன் முகமது கான் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரும் அதே டிவி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இருவரும் காதலித்து வந்ததாகவும், 15 நாட்களுக்கு முன்னதாக தான் இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வருகிற ஜனவரி 4ம் தேதி தனது 21வது பிறந்த நாளை கொண்டாட இருந்த துனிஷா சர்மா, திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் பாலிவுட் பட உலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.