Advertisement

சிறப்புச்செய்திகள்

'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : திமுகவுக்காக தலைப்பை மாற்றியதால் தன் பட தலைப்பை கொடுத்த எம்ஜிஆர்

25 ஏப், 2025 - 01:46 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-MGR-gave-his-film-title-after-changing-the-title-for-DMK

1986ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் 'நானும் ஒரு தொழிலாளி'. இந்த படத்தை ஸ்ரீதர் இயக்கினார். கமல்ஹாசன், அம்பிகா, ஜெய்சங்கர், வி.எல்.ராகவன் உள்பட பலர் நடித்தனர், பின்னாளில் அதிக படங்களில் கமலுடன் ஜோடியாக நடித்த அம்பிகா கமலுடன் நடித்த முதல் படம்.

இந்த படம் ஒரே நேரத்தில் தெலுங்கிலும் 'அந்தரிகண்டே கானுடு' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. தெலுங்கு பதிப்பில் கமல் நடித்த கேரக்டரில் முரளி மோகன் நடித்தார். இந்த படத்திற்கு முதலில் ஸ்ரீதர் 'சக்தி' என்று பெயர் வைத்தார், பின்னர் அந்த பெயரை 'மீண்டும் சூர்யோதயம்' என்று மாற்றினார்.

படம் வெளியாகும் நேரத்தில் அப்போது ஆட்சியில் இருந்தது எம்ஜிஆர். அந்தசமயம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரிய வெற்றி பெற்றிருந்தது. அதனால் இந்த தலைப்பு எம்ஜிஆரின் மனதை புண்படுத்தும் என்று கருதி உள்ளார் ஸ்ரீதர். இதுபற்றி எம்ஜிஆரிடம் ஸ்ரீதர் பேசி உள்ளார். படத்தின் கதையை கேட்ட எம்ஜிஆர் 'இந்த தலைப்பால் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் இந்த கதைக்கு, நான் முன்பு நடிப்பதாக இருந்த 'நானும் ஒரு தொழிலாளி' தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று எம்ஜிஆர் கூறியதாகவும், அந்த தலைப்பையே ஸ்ரீதர் இந்த படத்திற்கு வைத்ததாகவும் கூறுவார்கள். தலைப்புக்கு ஏற்ப படமும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளிவந்தது.

தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலதிபரின் மகன் வெளிநாட்டில் படிக்கிறார். தந்தை ஒரு கார் விபத்தில் இறந்ததும் இந்தியா திரும்பும் மகன், தனது அப்பாவை ஏமாற்றி இங்கு இருக்கும் சிலர் கொள்ளை அடிப்பதை அறிந்து கொண்டு தனது சொந்த தொழிற்சாலைக்குள் ஒரு சாதாரண தொழிலாளியாக நுழைந்து எப்படி அவர்களின் தில்லு முல்லுகளை கண்டுபிடிக்கிறார் என்பது மாதிரியான கதை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பஹல்காம் தாக்குதலை திசை திருப்பாதீர்கள்: ஆண்ட்ரியா வேண்டுகோள்பஹல்காம் தாக்குதலை திசை ... 25வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய அஜித்குமார் - ஷாலினி! 25வது திருமண நாளை கேக் வெட்டி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in