2026ல் துவங்கும் தனுஷின் மூன்று படங்கள் | ‛திருச்சிற்றம்பலம்' இயக்குனருடன் கைகோர்க்கும் சண்முக பாண்டியன் | காதல் குறித்து கிர்த்தி சனோன் வெளியிட்ட தகவல் | 2026ல் ஐந்து ஹிந்தி படங்களில் நடிக்கும் தமன்னா | பெரிய படங்களின் வசூலை சுட்டிக்காட்டிய சிம்ரன்! | கைகூப்பி கேட்கிறேன்... ஆதரிக்காதீங்க : ஸ்ரீலீலா | சிம்புவின் 51வது படத்தை தயாரிப்பதை உறுதிப்படுத்திய அர்ச்சனா கல்பாத்தி | தோழிகளுடன் இலங்கைக்கு டூர் சென்ற ராஷ்மிகா மந்தனா | பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்து அர்ச்சனா கல்பாத்தி தந்த அப்டேட்! | தனுஷ் - வினோத் கூட்டணி படத்தின் புதிய அப்டேட்! |

சென்னையில் நடந்த 'ஆறு அறிவு' படவிழாவில் பேசியவர்கள், ஒரு காலத்தில் அதிமுகவுக்கு தலைமை ஏற்று நடத்துகிற வாய்ப்பு கே.பாக்யராஜ்க்கு வந்தது என்ற ரீதியில் பேசினார்கள. அதற்கு மேடையிலே அவர் விளக்கம் அளித்தார்.
''எம்ஜிஆர் மறைந்தவுடன் ஆர்எம்வி தலைமையில் கட்சி தொடர்ந்து நடக்க வேண்டும் என்று சில மூத்த த லைவர்கள் என்னிடம் வந்து பேசினார்கள். அதற்கு நீங்க குரல் கொடுக்க வேண்டும் என்றார்கள். இப்போதுதான் எம்ஜிஆர் மறைந்து இருக்கிறார். சில நாட்களில் இப்படி பேசுவது சரியல்லை என்றேன். அடுத்து சிலர் வந்து ஜெயலலிதா கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று நீங்க பேச வேண்டும் என்கிறார்கள். அவர்களிடமும் அதே பதிலை சொன்னேன்.
மேலும் இப்போதைய நிலையில் எம்ஜிஆர் மனைவி ஜானகி தலைமை ஏற்கட்டும். பின்னர் பொதுக்குழுவில் யாருக்கு ஆதரவு இருக்கிறதோ, அவர்கள் வசம் கட்சி போகட்டும் என்றேன். மற்றபடி நான் அதிமுகவை நடத்த நினைக்கவில்லை.
சட்டசபை தேர்தல் வரும் நேரத்தில் தவறான கருத்துகள் பரவ வேண்டாம்'' என்றார் பாக்யராஜ்.