மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கடந்த 2017ம் ஆண்டு அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவு காரணமாக, அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், அணி மாறிவிடக்கூடாது என்பதற்காக மகாபலிபுரம் அருகே கூவத்தூரில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இது தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி ஏ.வி.ராஜூ என்பவர் ஒரு வீடியோவில் பேசி இருந்தார். அதில் நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் குறித்து அவதூறாக பேசியிருந்தார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ராஜூ மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் நடிகர் கருணாஸ். அதில், ‛‛என் மீது வன்மம் கொண்டு அவதூறாக மற்றும் அருவருப்பான உண்மைக்கு மாறான செய்தியை பரப்பி உள்ளார் ராஜூ. நடிகை த்ரிஷா பற்றியும், என்னையும் தொடர்புபடுத்தி பேட்டி கொடுத்துள்ளார். இது பல யு-டியூப் சேனலிலும் வெளியாகி உண்மைக்கு மாறாக அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். எனவே ராஜு மற்றும் பல யுடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடியோவை நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.