எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா |

பாலிவுட்டின் சீனியர் நடிகையும், நடிகர் அமிதாப்பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சனுக்கு சமீபத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருது விழாவில் பாலிவுட்டின் மிகப்பெருமை வாய்ந்த சினி ஐகான் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஷாரூக்கான் மற்றும் இயக்குனர் கரண் ஜோகர் இணைந்து ஜெயா பச்சனிடம் வழங்கினார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், தயவு செய்து நமது திரையுலகத்தை பாலிவுட் என்று அழைக்காதீர்கள் என்று கொஞ்சம் காட்டமாகவே பேசியுள்ளார்.
“நட்சத்திரங்கள், எழுத்தாளர்கள், இயக்குனர்கள், ஏன் பார்வையாளர்கள் கூட பாலிவுட் என்றே குறிப்பிடுகிறார்கள். இது பாலிவுட்டும் அல்ல, ஹாலிவுட்டும் அல்ல. தயவுசெய்து அப்படி குறிப்பிட வேண்டாம். இது ஹிந்தி - இந்தியன் திரை உலகம். அதற்கான மரியாதையை கொடுங்கள். திரையுலகில் 55 வருடங்களாக இருப்பவள் என்கிற முறையில் இந்த கோரிக்கையை நான் வைக்கிறேன்” என்று கேட்டுக்கொண்டார்.