பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த தீபாவளிக்கு ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தம்மா என்ற ஹிந்தி படம் வெளியானது. அதையடுத்து ‛தி கேர்ள் பிரண்ட்', ‛மைசா' போன்ற தெலுங்கு படங்களும், ஹாக்டெய்ல் 2 என்ற ஹிந்தி படமும் அவர் கைவசம் உள்ளது. இதில், தி கேர்ள் பிரண்ட் படம் வருகிற நவம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது. ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தின் கதை அவரை பெரிய அளவில் இம்ப்ரஸ் செய்து விட்டதாம். அதனால் இப்படியொரு கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தை பெருமையாக கருதுகிறேன் என்று சொல்லி இந்த படத்தில் ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறாராம் ராஷ்மிகா. என்றாலும் இப்படம் திரைக்கு வந்த பிறகு அவருக்கான சம்பளத்தை வற்புறுத்தியாவது கொடுத்து விடுவோம் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்.