திரை உலகில் அடுத்த சோகம்... இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மறைவு | நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் |
சின்னத்திரை ரசிகர்ளின் மிகவும் பேவரைட் சீரியலான எதிர்நீச்சல் தொடர் அதில் நடிக்கும் எதார்த்தமான கதாபாத்திரங்களுக்காகவே அதிகம் விரும்பப்படுகிறது. அதிலும் குணசேகரன் கதாபாத்திரத்தை ரசிக்காதே ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நடிகர் மாரிமுத்து அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார். ஆனால், அவரது திடீர் மரணம் காரணமாக எதிர்நீச்சல் தொடரின் கதையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
வேல ராமமூர்த்தி குணசேகரன் கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்தாலும் சீரியல் பழைய வேகத்திற்கு வரவில்லை. குணசேகரன் கதாபாத்திரமும் அடிக்கடி காணமால் போய்விடுகிறது. இதற்கிடையில் புதிய வில்லன் என கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தை நுழைத்துள்ளனர். இதில் இலங்கையை சேர்ந்த ஆர்ஜே நெலு நடித்து வருகிறார். ஏற்கனவே குறும்படங்களிலும், சில படங்களிலும் நடித்தும் இயக்கியும் வந்த ஆர்ஜே நெலு எதிர்நீச்சல் சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
ஆனால், அவர் தற்போது பிரபல இயக்குநரான வசந்தபாலனுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் அவர் மீண்டும் சினிமாவுக்கு செல்கிறாரா? அவர் சினிமாவில் கமிட்டாகிவிட்டால் கிருஷ்ணா கதாபாத்திரமும் காணமல் போகுமா? என ரசிகர்கள் சோகமாக கேட்டு வருகின்றனர்.