மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை நடிகர் விஷ்ணுகாந்த் மீது சம்யுக்தா அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைத்து வந்தார். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் சம்யுக்தாவிற்கும், ஆர்.ஜே.ரவிக்கும் இருந்த உறவை ஆடியோவை ரிலீஸ் செய்து அம்பலடுத்தினார் விஷ்ணுகாந்த். இதனைதொடர்ந்து ஆர்.ஜே.ரவி ஒரு அப்யூஸர் என்றும், அதனால் தான் அவரைவிட்டு பிரிந்ததாகவும் சம்யுக்தா கூறினார். இதனால், பலரும் ஆர்.ஜே.ரவியை விமர்சிக்க ஆரம்பித்தனர். அதற்கு பதில் கொடுக்கும் வகையில் ஆர்.ஜே.ரவி நீண்ட ஒரு கடிதத்தை தனது சோஷியல் மீடியா பதிவில் வெளியிட்டிருந்தார்.
அதில், 'நான் எதையும் விளக்கபோவதில்லை. என்னை உங்களுக்கு நன்றாக தெரியும். நான் என்னுடன் நடித்த சக நடிகைகளை பாதுகாப்பாக தான் உணர செய்துள்ளேன். என் பெற்றோர்கள் பெண்களை மதிக்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு மேல் நான் விளக்கம் சொல்ல வேண்டுமா? ' என்று பதிவில் கூறியுள்ளார்.
இந்த பதிவை சக நடிகையான வெண்பா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து 'வீ ஸ்டேண்ட் வித் ரவி', 'லெட் கர்மா ஸ்பீக்' என ஆர்.ஜே.ரவிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும், பலரும் ஆர்.ஜே.ரவிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர்.
விஷ்ணுகாந்த் வெளியிட்ட ஆடியோவுக்கும் ஆர்.ஜே.ரவியின் இந்த பதிவுக்கும் தற்போது வரை சம்யுக்தா தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே, சம்யுக்தா தான் செய்யும் தப்பை மறைக்க தன்னிடம் உறவிலிருந்த ஆண்கள் மீது பொய்யாக குற்றம் சுமத்துகிறாரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.