லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். |
மலையாள நடிகை சம்யுக்தா தமிழில் ‛களரி' என்ற படத்தில் அறிமுகமானவர். அதன்பிறகு தனுஷ் நடித்த ‛வாத்தி' படத்தில் நடித்து தமிழ், தெலுங்கில் பிரபலமானார். தற்போது ராகவா லாரன்ஸ் உடன் ‛பென்ஸ்' மற்றும் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது சம்யுக்தா அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், ‛‛எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. என்றாலும் தினமும் அதை குடிப்பதில்லை. அதிகப்படியான மன அழுத்தமோ பதட்டமோ ஏற்படும் போது மட்டுமே குடிப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் நடிகர், நடிகைகள் மது அருந்தும் பழக்கம் தங்களுக்கு இருந்தாலும் அதை வெளிகாட்டினால் தங்களது இமேஜ் பாதிக்கும் என்று அதை மறைக்கத்தான் முயல்வார்கள். ஆனால் சம்யுக்தா இப்படி வெளிப்படையாக பேசி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.