அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது |

மலையாள நடிகை சம்யுக்தா தமிழில் ‛களரி' என்ற படத்தில் அறிமுகமானவர். அதன்பிறகு தனுஷ் நடித்த ‛வாத்தி' படத்தில் நடித்து தமிழ், தெலுங்கில் பிரபலமானார். தற்போது ராகவா லாரன்ஸ் உடன் ‛பென்ஸ்' மற்றும் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது சம்யுக்தா அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், ‛‛எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. என்றாலும் தினமும் அதை குடிப்பதில்லை. அதிகப்படியான மன அழுத்தமோ பதட்டமோ ஏற்படும் போது மட்டுமே குடிப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் நடிகர், நடிகைகள் மது அருந்தும் பழக்கம் தங்களுக்கு இருந்தாலும் அதை வெளிகாட்டினால் தங்களது இமேஜ் பாதிக்கும் என்று அதை மறைக்கத்தான் முயல்வார்கள். ஆனால் சம்யுக்தா இப்படி வெளிப்படையாக பேசி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.