மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது |
தனுஷ் நடித்த 'வாத்தி' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சம்யுக்தா. தற்போது 'அகான்டா 2' உள்ளிட்ட சில தெலுங்குப் படங்களிலும், ஹிந்தி, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.
உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் கங்கையில் நீராடிய சம்யுக்தா அது குறித்த புகைப்படங்களைப் பதிவிட்டு, “வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட பரந்த தன்மையை நாம் காணும் போது அதன் அர்த்தம் வெளிப்படுகிறது. மகாகும்பமேளாவில் கங்கையில் புனித நீரோட்டத்தைப் போல எப்போதும் நனவின் நீரோட்டத்தை ஊட்டமளிக்கும் அதன் எல்லையற்ற உணர்விற்காக நான் எனது கலாச்சாரத்தை மதிக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கேஜிஎப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியும் புனித நீராடியது பற்றி, “பிரயாக் என்னை அழைத்தது போல இருக்கிறது. ஆரம்பத்தில் எனக்கு எந்த யோசனையோ அல்லது திட்டங்களோ இல்லாததால், நான் வேலையில் மும்முரமாக இருந்தேன். பின்னர் ஒன்று இன்னொரு விஷயத்திற்கு வழி வகுத்தது. நான் எனது விமானப் பயணத்தை முன்பதிவு செய்தேன், தங்கினேன், ஒரு பையை வாங்கினேன், நான் இங்கேயே தங்கினேன். மில்லியன் கணக்கானவர்களிடையே வழிகளைத் தேடுகிறேன்.
என் அப்பா மகிழ்ச்சியுடன் எனது கடைசி நிமிடத் திட்டங்களை எல்லாம் செய்து கொண்டிருந்தார். ஆனால், இது உண்மையிலேயே பல வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே. எனவே, எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை. வாழ்நாள் முழுவதும் பதிந்த ஒரு அனுபவமும், நினைவுகளும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் என பலரும் இந்த ஆண்டு கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடியுள்ளனர்.