யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் தனி இசை அமைப்பாளராக அறிமுகமானபோது தனது அண்ணனின் இசை குறிப்புகளிலேயே இசை அமைத்தார். பின்னர் அவர் தன்னிச்சையாக இசை அமைத்தபோதும் அது இளையராஜாவின் பாடல்கள் என்றே ரசிகர்கள் நம்பினார்கள். பல படங்களுக்கு அவர் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தபோதும் அது இளையராஜா பாடல் என்றே நம்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வந்த படம்தான் 'வாழ்வே மாயம்'. தெலுங்கில் 'பிரேமாபிஷேகம்' என்ற பெயரில் வெளிவந்து ஹிட்டான படத்தை கே.பாலாஜி தமிழில் 'வாழ்வே மாயம்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். தெலுங்கில் தாசரி நாராயணராவ் இயக்கியிருந்தார். தமிழில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். அக்னினேனி நாகேஸ்வரராவ் நடித்த கேரக்டரில் கமல் நடித்தார்.
'பிரேமாபிஷகம்' படத்திற்கு சக்ரவர்த்தி இசை அமைத்திருந்தார். தெலுங்கில் பாடல்கள் ஹிட்டானாலும். காலத்தை வென்ற சூப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் 'வாழ்வே மாயம்' படத்திற்கு கங்கை அமரன் இசை அமைத்த பாடல்கள் காலத்தை வென்ற சூப்பர் ஹிட் பாடல் ஆனது. காட்சியின் சூழலுக்கு ஏற்ப சக்ரவர்த்தி போட்டிருந்த மெட்டை தழுவி அதில் மாற்றங்களை செய்து பாடல்களுக்கு புதிய இசையை கொடுத்திருந்தார் கங்கை அமரன்.
'தேவி ஸ்ரீதேவி, ஏ ராஜாவே, நீலவான ஓடையில், மழைக்கால மேகம், வந்தனம், வாழ்வே மாயம்...' என்று அத்தனை பாடல்களும் இன்றைக்கும் கேட்கும்போது மெய்மறக்க வைக்கும் பாடல்களாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசையும் பாடல்களும் பார்த்து, இளையராஜாதான் இசை என்று பல காலம் பந்தயம் கட்டியவர்களெல்லாம் உண்டு. ஒரு பொது நிகழ்ச்சியில் வாழ்வே மாயம் பாடல்கள் என்னுடையதல்ல, தம்பியுடையது என்று இளையராஜா சொன்ன பிறகே இந்த சந்தேகம் முடிவுக்கு வந்தது.