எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சின்னத்திரை நடிகர்கள் விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் சீக்கிரமாகவே காதலித்து திருமணம் செய்து கொண்டது போல் சீக்கிரமாகவே பிரிந்தும் விட்டனர். அவர்கள் பஞ்சாயத்து தான் சோஷியல் மீடியாவில் தற்போது பேசு பொருளாகியுள்ளது. சம்யுக்தா குறித்து விஷ்ணுகாந்த் சில பேட்டிகளில் பேசியிருந்ததை தொடர்ந்து சம்யுக்தா அண்மையில் லைவ் வீடியோவில் விஷ்ணுகாந்துக்கும் தனக்கும் இடையேயான பிரச்னை குறித்து விரிவாக பேசியிருந்தார். அதில், விஷ்ணுகாந்த் தன்னை மிரட்டி தான் திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து பலரும் விஷ்ணுகாந்தை விமர்சிக்க ஆரம்பித்தனர். விஷ்ணுகாந்தும் நேற்று (மே 17) மாலை 6 மணிக்கு லைவ்வில் வந்து உண்மையை பேசப்போவதாக போஸ்ட் செய்திருந்தார்.
இதனையடுத்து நேற்று மதியமே இன்ஸ்டாகிராம் லைவ்வில் வந்த சம்யுக்தா, ‛சம்யுக்தாவின் உறவினர் ஒருவருக்கு போன் செய்து சம்யுக்தா பற்றிய பாஸ்ட் லைப் ரகசியங்களும், சம்யுக்தாவின் 4 மணி நேர வீடியோவும் தன்னிடம் இருப்பதாகவும், தொடர்ந்து என்னை பற்றி சம்யுக்தா பேசினால் அதை வெளியிடுவேன்' என்று விஷ்ணுகாந்த் மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக சம்யுக்தா போலீசில் புகார் அளித்ததாகவும் ஆனால், விஷ்ணுகாந்த் விசாரணைக்கு வரவில்லை. சம்மனையும் வாங்கவில்லை என்றும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.