எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் |

கடைசியாக ‛சுபம்' என்ற தெலுங்கு படத்தை தயாரித்து அதில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் சமந்தா. அந்தப் படத்தை தொடர்ந்து தனது த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பாக ‛மா இண்டி பங்காரம்' என்ற ஒரு படத்தையும் தயாரித்து தான் கதையின் நாயகியாக நடிக்கப் போவதாக ஓராண்டுக்கு முன்பாகவே அறிவித்திருந்தார் சமந்தா. ஆக்சன் கதையில் உருவாகும் அப்படத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த சமந்தா தனது அடுத்த படம் குறித்த ஒரு தகவல் கொடுத்திருக்கிறார்.
அதில், ‛‛எனது அடுத்த தெலுங்கு படம் ‛மா இண்டி பங்காரம்'. இந்த படத்தை என்னுடைய த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நந்தினி ரெட்டி இந்த படத்தை இயக்குகிறார். இம்மாதம் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.