பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சந்தோஷ் எழுதி இயக்கி, தாணு தயாரிப்பில் வெளிவந்த படம் கணிதன். இந்த படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைத்திருந்தார். அதர்வா, கேத்ரின் தெரசா, கே.பாக்யராஜ், ஆடுகளம் நரேன், மனோபாலா மற்றும் கருணாகரன், தருண் அரோரா உள்பட பலர் நடித்திருந்தனர்.
தொலைக்காட்சியில் பெரிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் அதர்வா, பிபிசியில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததற்காக கைது செய்யப்படுகிறார். தனது கல்வி ஆவணங்கள் பொய்யானவை என்பதை அறிந்த அதர்வா அதற்கு காரணமானவர்களை எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.
2016ம் ஆண்டு வெளியான இந்தப் படம் 7 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக நாளை (29ம் தேதி) கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இதுகுறித்து இயக்குனர் சந்தோஷ் கூறும்போது “படம் வெளியானபோது பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைக்கதையில் இதுபோன்ற இருண்ட உண்மைகளை மக்களுக்கு மத்தியில் வெளிக்கொணர்வது சவாலானது ஆகும். சில சுவாரஸ்யமான துப்புகளுக்கு வழிவகுக்கும் எலியும் பூனையுமாக துரத்தி கொண்டு செல்வது பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். என்றார்.