மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விஜய் டிவிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' தொடர் மூலமாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கிருவர் தொடர்களில் நடித்தார். தற்போது 'இது சொல்ல மறந்த கதை' சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கும் சின்னத்திரை நடிகர் தினேஷூக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தினேஷ் கூறியிருப்பதாவது: எல்லோர் வீட்டிலும் கணவன், மனைவிக்குள்ளாக சண்டை இருப்பது போன்றுதான் எங்களுக்குள்ளும் சின்ன சண்டை இருக்கிறது. சிலர் சீக்கிரம் புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்து விடுவார்கள். சிலருக்கு அது நேரம் எடுக்கும். எங்களுக்குள்ளும் அது போலத்தான். சிறிது காலம் பிரிந்து இருக்கிறோம். ஆனால், இப்போது வரை நானோ, ரச்சிதாவோ சட்டரீதியாக பிரியலாம் என்று நினைத்து எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்பது மட்டும் உறுதி.
விரைவில் காலம் எல்லாவற்றையும் சரி செய்யும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். ரச்சிதா என்னை விட தைரியசாலி. தவறாக பரவும் வதந்திகளை கண்டு கொள்ள மாட்டார். நானும் அதை புறந்தள்ளி விடுவேன். இப்போதைக்கு இருவரும் அவரவர் வேலையில் கவனமாக இருக்கிறோம். விரைவில் நல்லது நடக்கும் என நம்புகிறேன். என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இருவரும் பிரிந்து வாழ்வது உறுதியாகி இருக்கிறது. ரச்சிதா தரப்பில் விவாகரத்துக்கான சட்டரீதியான ஏற்பாடுகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.