தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
ஜீ தமிழில் ஏப்ரல் 11 முதல் ஒளிபரப்பாகவுள்ள புத்தம் புதிய தொடர் “கன்னத்தில் முத்தமிட்டால்”. ஒரு வளர்ப்புத் தாய்க்கும், வளர்ப்பு மகளுக்கும் இடையிலான பாசமிகு அழகிய பந்தத்தினை இந்த தொடர் சொல்ல உள்ளது.
கன்னத்தில் முத்தமிட்டால் நாயகியான ஆதிரா ஒரு புத்திசாலித்தனமான, பரபரப்பான டீன் ஏஜ் பெண். ஆனால், கசப்பான கடந்த கால அனுபவத்தினால் அவளது வளர்ப்புத்தாய் சுபத்ராவை அவள் வெறுக்கிறாள். அதிர்ச்சியூட்டும் ஒரு உண்மை வெளிப்படும் போது, அவர்களது உறவில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆதிரா மற்றும் சுபத்ராவிற்கும் இடையே விளக்க முடியாத ஒரு பந்தம் ஏற்படுவதே இக்கதையின் சுவாரஸ்யமான பகுதியாகும்.
இதில் மனிஷாஜித் ஆதிராவாகவும், திவ்யா சுபத்ராவாகவும் நடித்துள்ளனர். ஏப்ரல் 11ம் தேதி முதல் துவங்கும் இந்த தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
'கன்னத்தில் முத்தமிட்டால்' தொடர் நேயர்களுக்கு வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல், அதன் கதை மற்றும் கதாபாத்திரங்களுடன் இணைந்து பயணிக்க வைத்து, மன உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் அனுபவத்தினையும் அளிக்கும்” என்கிறார் ஜீ தமிழ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சிஜூ பிரபாகரன்.