ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
ஜீ தமிழில் ஏப்ரல் 11 முதல் ஒளிபரப்பாகவுள்ள புத்தம் புதிய தொடர் “கன்னத்தில் முத்தமிட்டால்”. ஒரு வளர்ப்புத் தாய்க்கும், வளர்ப்பு மகளுக்கும் இடையிலான பாசமிகு அழகிய பந்தத்தினை இந்த தொடர் சொல்ல உள்ளது.
கன்னத்தில் முத்தமிட்டால் நாயகியான ஆதிரா ஒரு புத்திசாலித்தனமான, பரபரப்பான டீன் ஏஜ் பெண். ஆனால், கசப்பான கடந்த கால அனுபவத்தினால் அவளது வளர்ப்புத்தாய் சுபத்ராவை அவள் வெறுக்கிறாள். அதிர்ச்சியூட்டும் ஒரு உண்மை வெளிப்படும் போது, அவர்களது உறவில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆதிரா மற்றும் சுபத்ராவிற்கும் இடையே விளக்க முடியாத ஒரு பந்தம் ஏற்படுவதே இக்கதையின் சுவாரஸ்யமான பகுதியாகும்.
இதில் மனிஷாஜித் ஆதிராவாகவும், திவ்யா சுபத்ராவாகவும் நடித்துள்ளனர். ஏப்ரல் 11ம் தேதி முதல் துவங்கும் இந்த தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
'கன்னத்தில் முத்தமிட்டால்' தொடர் நேயர்களுக்கு வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல், அதன் கதை மற்றும் கதாபாத்திரங்களுடன் இணைந்து பயணிக்க வைத்து, மன உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் அனுபவத்தினையும் அளிக்கும்” என்கிறார் ஜீ தமிழ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சிஜூ பிரபாகரன்.