சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
ஜீ தமிழில் ஏப்ரல் 11 முதல் ஒளிபரப்பாகவுள்ள புத்தம் புதிய தொடர் “கன்னத்தில் முத்தமிட்டால்”. ஒரு வளர்ப்புத் தாய்க்கும், வளர்ப்பு மகளுக்கும் இடையிலான பாசமிகு அழகிய பந்தத்தினை இந்த தொடர் சொல்ல உள்ளது.
கன்னத்தில் முத்தமிட்டால் நாயகியான ஆதிரா ஒரு புத்திசாலித்தனமான, பரபரப்பான டீன் ஏஜ் பெண். ஆனால், கசப்பான கடந்த கால அனுபவத்தினால் அவளது வளர்ப்புத்தாய் சுபத்ராவை அவள் வெறுக்கிறாள். அதிர்ச்சியூட்டும் ஒரு உண்மை வெளிப்படும் போது, அவர்களது உறவில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆதிரா மற்றும் சுபத்ராவிற்கும் இடையே விளக்க முடியாத ஒரு பந்தம் ஏற்படுவதே இக்கதையின் சுவாரஸ்யமான பகுதியாகும்.
இதில் மனிஷாஜித் ஆதிராவாகவும், திவ்யா சுபத்ராவாகவும் நடித்துள்ளனர். ஏப்ரல் 11ம் தேதி முதல் துவங்கும் இந்த தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
'கன்னத்தில் முத்தமிட்டால்' தொடர் நேயர்களுக்கு வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல், அதன் கதை மற்றும் கதாபாத்திரங்களுடன் இணைந்து பயணிக்க வைத்து, மன உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் அனுபவத்தினையும் அளிக்கும்” என்கிறார் ஜீ தமிழ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சிஜூ பிரபாகரன்.