காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி தொடரில் கோபியாக நடித்து கலக்கி வருபவர் நடிகர் சதீஷ் குமார். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியில் சிறந்த வில்லனுக்கான விருதை தட்டிச் சென்றார். இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே சதீஷ் குமாரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருவதோடு, பாராட்டுகளையும் பெற்று வருகிறார். வில்லன் கதாபாத்திரம் என்றாலும் கூட ஒரு ஹீரோவுக்கு இணையாக தான் ரசிகர்கள் இவரை ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர் தனது பழைய புகைப்படத்துடன் நகைச்சுவையான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'ச்சே... ஹீரோன்னு நினைச்சோம். வில்லன் ஆக்கி விருது குடுத்துட்டாங்க. வில்லனுக்கு ரெண்டு ஹீரோயின். எந்த கதையில இப்படி வருது. அப்போ நான் நல்லவனா? கெட்டவனா?. இல்ல நீ வல்லவன்' என பதிவிட்டு அதை தனது கதாபாத்திரமான கோபியின் மைண்ட் வாய்ஸ் என குறிப்பிட்டுள்ளார். இதைபார்க்கும் ரசிகர்களோ 'உங்களுக்கு சிறந்த நடிகர்' பிரிவில் விருது வழங்கியிருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.




