மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி பிக்பாஸ் அல்டிமேட் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதற்கிடையில் கடைசிவார எவிக்ஷனாக யார் வெளியேறுவார் என ரசிகர்கள் அனைவரும் திக் திக் நொடிகளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஹவுட்ஸ்மேட்டுகள் பலரும் தாமரைக்கு எதிராக இருந்ததால் அவர் தான் வெளியேற்றப்படுவார் என கருத்துகள் பரவியது.
ஆனால், பிக்பாஸ் தாமரையை காப்பாற்றி, அபிராமியை எலிமினேட் செய்துவிட்டார். பினாலே வாரத்தின் எவிக்சன் டாஸ்கில் போட்டியாளர்கள் மீது நெருப்பு பொறி கொட்டப்படுகிறது. அப்போது போட்டியாளர்களை அதிலிருந்து காப்பாற்றும் சேவ்ட் என்ற எழுத்து பொறிக்கப்பட்ட பாதுகாப்பு வளையம் அனைத்து ஹவுஸ்மேட்டுகள் மீதும் விழுகிறது. அபிராமி மீது மட்டும் விழவில்லை. இதனை தொடர்ந்து பிக்பாஸ் அபிராமி எலிமினேட் செய்யப்படுவதாக அறிவிக்கிறார். அபிராமி தனது சக போட்டியாளர்களிடம் விடைபெற்றுக் கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.