ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

ரப் நோட் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ராஜ் தருண்பால் ஹீரோவாகவும், முக்கிய வேடத்தில் ஆரி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.
இப்போது இவர்களுடன் நடிகை அம்மு அபிராமியும், ‛பசங்க' புகழ் கிஷோரும் இணைந்திருக்கிறார்கள். இருவரும், விஜய் மில்டன் இயக்கிய 'கோலி சோடா ரைசிங்' வெப் சீரிஸில் இணைந்து நடித்தனர். இப்போது இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
இதுகுறித்து விஜய் மில்டன் கூறும்போது "அம்முவும், கிஷோரும் தங்கள் கதாபாத்திரங்களை உண்மையின் அடிப்படையில் அற்புதமாக காட்டக்கூடிய திறமை கொண்டவர்கள். அவர்கள் நடிப்பது மட்டுமல்ல, அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்கிறார்கள். அவர்கள் இந்தப் படத்துக்கு தரும் உயிர் துடிப்பை ரசிகர்கள் விரைவில் அனுபவிக்க இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார்.




