துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ரப் நோட் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ராஜ் தருண்பால் ஹீரோவாகவும், முக்கிய வேடத்தில் ஆரி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.
இப்போது இவர்களுடன் நடிகை அம்மு அபிராமியும், ‛பசங்க' புகழ் கிஷோரும் இணைந்திருக்கிறார்கள். இருவரும், விஜய் மில்டன் இயக்கிய 'கோலி சோடா ரைசிங்' வெப் சீரிஸில் இணைந்து நடித்தனர். இப்போது இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
இதுகுறித்து விஜய் மில்டன் கூறும்போது "அம்முவும், கிஷோரும் தங்கள் கதாபாத்திரங்களை உண்மையின் அடிப்படையில் அற்புதமாக காட்டக்கூடிய திறமை கொண்டவர்கள். அவர்கள் நடிப்பது மட்டுமல்ல, அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்கிறார்கள். அவர்கள் இந்தப் படத்துக்கு தரும் உயிர் துடிப்பை ரசிகர்கள் விரைவில் அனுபவிக்க இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார்.