படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

ஒளிப்பதிவாளர், இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் 'மழை பிடிக்காத மனிதன்'. கடந்த வருடம் ஆகஸ்ட் 2ம் தேதி இந்தப் படம் வெளிவந்தது. இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, விஜய் ஆண்டனி, சரத்குமார் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பையும், வெற்றியையும் பெறவில்லை.
படம் வெளியான போதே ஒரு சர்ச்சை எழுந்தது. படத்தின் ஆரம்பத்தில் இடம் பெற்ற ஒரு நிமிடம் ஓடக் கூடிய அறிமுகக் காட்சி ஒன்று தனக்குத் தெரியாமல் படத்தில் சேர்த்துள்ளதாக படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் அப்போது குற்றம் சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அந்த அறிமுகக் காட்சி நீக்கப்பட்டது.
அந்தக் காட்சியை படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி சேர்த்தாரா அல்லது தயாரிப்பாளர்கள் சேர்த்தார்களா என்ற சர்ச்சை எழுந்தது. சில நாட்களில் அது நீக்கப்பட்டதாலும், படமும் தியேட்டர்களில் ஓடாததாலும் சர்ச்சையும் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு அந்த சர்ச்சையை மீண்டும் நினைவூட்டியுள்ளார் இயக்குனர் விஜய் மில்டன். 'ராஞ்சனா' படத்தின் ரீ-ரிலீஸில் ஏஐ மூலம் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையை மறுபதிவு செய்து, “மழை பிடிக்காத மனிதன்' படத்திற்கும் இதுதான் நடந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.