ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தியேட்டர்களை முற்றுகையிட்ட நாம் தமிழ் கட்சியினர் கைது செய்யபட்டனர்.
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் தெலுங்கில் உருவாகி, தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளில் டப்பிங் ஆகி ரிலீஸ் செய்யப்பட்டுள்ள படம் ‛கிங்டம்'. இந்த படத்தின் கதை இலங்கையில் நடைபெறுவது போன்று உள்ளது. இந்நிலையில் இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல் இந்த படம் சித்தரிப்பதாகவும், அங்குள்ள மலையகத் தமிழர்களை இலங்கை தமிழர்கள் ஒடுக்கினார்கள் என்பது போன்று காட்சிகள் இருப்பதாக கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார். 'கிங்டம்' படத்தை தமிழகத்தில் திரையிட்டால் தியேட்டர்களை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று(ஆக., 5) தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ‛கிங்டம்' படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். சில ஊர்களில் தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த அந்த படத்தின் போஸ்டர், பேனர்களை கிழித்தனர். தியேட்டர்களில் ஏற்கனவே சில ஊர்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோவை, ராமாநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.