தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‛கிங்டம்'. இதில் இலங்கை தமிழர்களை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நேற்று பல ஊர்களில் இந்தபடம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் பலர் கைதும் செய்யப்பட்டனர். இந்த படத்திற்கு பாதுகாப்பு கேட்டு படக்குழு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இப்பட நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‛‛தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். இந்தக்கதை கற்பனையானது என படத்தின் கார்டில் குறிப்பிட்டுள்ளோம். அதையும் மீறி மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறோம். கிங்டம் படத்திற்கு ஆதரவு தாருங்கள்'' என தெரிவித்துள்ளனர்.