தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள மதராஸி படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்து சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இதில், மதராஸி படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. தான் அளித்துள்ள ஒரு பேட்டியில் தனது பல அழுத்தத்தை போக்கும் அருமருந்தாக தனது பிள்ளைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அது குறித்து அவர் கூறுகையில், ‛‛என்னுடைய மகள், இரண்டு மகன்கள் என மூன்று பிள்ளைகளையும் எனது மனைவிதான் முழுமையாக கவனித்துக் கொள்கிறார். அவருக்குத்தான் அவர்களை கவனித்துக் கொள்வதில் எவ்வளவு சிரமம் என்பது தெரியும். அதோடு நான் படப்பிடிப்பு தளங்களில் மன அழுத்தம் ஏற்பட்டு வீட்டுக்கு செல்லும்போது என்னுடைய பிள்ளைகள் தான் அந்த அழுத்தத்தை போக்கி எனக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியை கொடுக்கிறார்கள். அவர்களுடன் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்து விட்டாலே என் மன அழுத்தம் எல்லாம் மாயமாகிவிடும்'' என்கிறார் சிவகார்த்திகேயன்.