என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

இயக்குனர் கவுதம் தின்னனூரி இயக்கத்தில் வெளியான 'ஜெர்ஸி' படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்து அவர் நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகராமல் கைவிடப்பட்டது. இதையடுத்து கவுதம் தற்போது விஜய் தேவரகொண்டாவை வைத்து 'கிங்டம்' படத்தை இயக்கினார். 'கிங்டம்' படம் வெளியான சில நாட்களில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
கவுதம் தின்னனூரி அளித்த பேட்டியில் ராம் சரண் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது," ஜெர்ஸி படத்திற்கு பிறகு ராம்சரணிடம் புதிய கதையொன்றை கூறினேன். அவருக்கு பிடித்திருந்தது. அதன் பின்னர் அந்த கதையினை முழுமையான திரைக்கதையாக எழுதினேன். அது ராம்சரணுக்கு பொருத்தமாக இருக்காது என்பதை உணர்ந்தேன். ராம்சரண் போன்ற ஒரு நட்சத்திர நடிகரை இயக்குவது ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. அதை ஏனோ தானோ என்று இயக்க விரும்பவில்லை. இது குறித்து அவரிடமும் கூறினேன். அதன் பின்னர் இருவரும் சரியான கதை அமையும் போது இணைந்து பணிபுரிய முடிவு செய்தோம்” என தெரிவித்துள்ளார்.