தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
இயக்குனர் கவுதம் தின்னனூரி இயக்கத்தில் வெளியான 'ஜெர்ஸி' படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்து அவர் நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகராமல் கைவிடப்பட்டது. இதையடுத்து கவுதம் தற்போது விஜய் தேவரகொண்டாவை வைத்து 'கிங்டம்' படத்தை இயக்கினார். 'கிங்டம்' படம் வெளியான சில நாட்களில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
கவுதம் தின்னனூரி அளித்த பேட்டியில் ராம் சரண் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது," ஜெர்ஸி படத்திற்கு பிறகு ராம்சரணிடம் புதிய கதையொன்றை கூறினேன். அவருக்கு பிடித்திருந்தது. அதன் பின்னர் அந்த கதையினை முழுமையான திரைக்கதையாக எழுதினேன். அது ராம்சரணுக்கு பொருத்தமாக இருக்காது என்பதை உணர்ந்தேன். ராம்சரண் போன்ற ஒரு நட்சத்திர நடிகரை இயக்குவது ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. அதை ஏனோ தானோ என்று இயக்க விரும்பவில்லை. இது குறித்து அவரிடமும் கூறினேன். அதன் பின்னர் இருவரும் சரியான கதை அமையும் போது இணைந்து பணிபுரிய முடிவு செய்தோம்” என தெரிவித்துள்ளார்.