என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'கூலி'. இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ந் தேதியன்று திரைக்கு வருவதை முன்னிட்டு லோகேஷ் பேட்டி அளித்து வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜிடம் பராசக்தி படத்தில் நடிக்காதது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அவர் கூறியதாவது, “ கடந்த மூன்று வருடங்களாக நிறைய நண்பர்கள் என்னை படங்களில் நடிக்க வைக்க அணுகினார்கள். சமீபத்தில் 'பராசக்தி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினார்கள். சுதா கொங்காரா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அனைவருமே நம்பி வாங்க பண்ணலாம் என்றார்கள். அந்தக் கதையும் ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால், கூலி படத்தின் பணிகள் பாதிப்படையும் என்பதால் நடிக்க முடியவில்லை. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.