ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஜூனியர் சூப்பர் சிங்கர், காமெடி ராஜா கலக்கல் ராணி, ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் விருது நிகழ்வில் பிரியங்காவிற்கு சிறந்த தொகுப்பாளர் 2022 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இதைப்பார்த்து கடுப்பான நெட்டிசன்கள், ப்ரியங்கா பிக்பாஸ் சீசன் 5 முடிந்து பல மாதங்களாக விஜய் டிவியில் பெரிய அளவில் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை. அப்படியிருக்க அவருக்கு ஏன் இந்த ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
டிடிக்கு அடுத்தப்படியாக பெண் தொகுப்பாளர்களில் கணிசமான ரசிகர்களை பெற்றுள்ள பிரியங்கா தேஷ்பாண்டே 2016 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்று முறை விஜய் டெலிவிஷன் விருதை சிறந்த பெண் தொகுப்பாளர் பிரிவில் வாங்கியுள்ளார்.