பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த வாரம் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. அதற்குள் போட்டியாளர்கள் யாராவது ஒருவர், பணத்துடன் வெளியேறும் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்றது. பணப்பெட்டியின் ஆரம்ப தொகை 3 லட்சமாக இருந்த போது நிரூப் அதை எடுத்துக் கொண்டு வெளியேறியதாக செய்திகள் வெளியானது. ஆனால், அது உண்மையல்ல. 6, 7, 8 லட்சம் என படிப்படியாக உயர்ந்த போது ஜூலி மட்டுமே லேசாக ஜெர்க் கொடுத்தார். எனவே, அவர் தான் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே செல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
தாமரையின் குடும்ப சூழலை வைத்து அவர் பணப்பெட்டியை எடுத்துக்கொள்ளலாம் எனவும் மக்கள் பரிந்துரை செய்து வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஸ்ருதி பெரியசாமி பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 15 லட்சம் பணப்பெட்டி உடன் வெளியேற ஸ்ருதி, ஜூலி முயன்றனர். இவர்களுக்கு சில டாஸ்கள் வைக்கப்பட்டன. இதில் ஸ்ருதி வெற்றி பெற்று 15 லட்சம் பணத்துடன் ஸ்ருதி வெளியேறினார். இதுவரை டப் கொடுத்து விளையாடிய ஸ்ருதிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.