புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த வாரம் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. அதற்குள் போட்டியாளர்கள் யாராவது ஒருவர், பணத்துடன் வெளியேறும் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்றது. பணப்பெட்டியின் ஆரம்ப தொகை 3 லட்சமாக இருந்த போது நிரூப் அதை எடுத்துக் கொண்டு வெளியேறியதாக செய்திகள் வெளியானது. ஆனால், அது உண்மையல்ல. 6, 7, 8 லட்சம் என படிப்படியாக உயர்ந்த போது ஜூலி மட்டுமே லேசாக ஜெர்க் கொடுத்தார். எனவே, அவர் தான் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே செல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
தாமரையின் குடும்ப சூழலை வைத்து அவர் பணப்பெட்டியை எடுத்துக்கொள்ளலாம் எனவும் மக்கள் பரிந்துரை செய்து வந்தனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஸ்ருதி பெரியசாமி பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 15 லட்சம் பணப்பெட்டி உடன் வெளியேற ஸ்ருதி, ஜூலி முயன்றனர். இவர்களுக்கு சில டாஸ்கள் வைக்கப்பட்டன. இதில் ஸ்ருதி வெற்றி பெற்று 15 லட்சம் பணத்துடன் ஸ்ருதி வெளியேறினார். இதுவரை டப் கொடுத்து விளையாடிய ஸ்ருதிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.