விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ | காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை | தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை | செல்போனை அதிகமாக யூஸ் பண்ணும் ஸ்ருதிஹாசன் | புதிய பட நிறுவனம் தொடங்கி கதையின் நாயகியாக உருவெடுக்கும் சிம்ரன் | மோசமான தோல்வியை சந்தித்த அனுஷ்காவின் காட்டி | கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா | ஹீரோவாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் | காக்கா முட்டை, சைவம், அநீதி, விசாரணை படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை : ஜிவி பிரகாஷ் | கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான கூலி படத்தில் ப்ரீத்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். அதையடுத்து டிரெயின் படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன் அடுத்து பிரபாஸின் சலார் படத்தின் இரண்டாம் பாகத்தில் விரைவில் நடிக்கப் போகிறார். இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு செல்போன் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஸ்ருதிஹாசன்.
அப்போது அவர் மீடியாக்களை சந்தித்தபோது, எல்லோரையும் போன்று நானும் செல்போனை ரொம்ப அதிகமாக யூஸ் பண்ணுகிறேன். மற்ற வேலைகளில் இருந்தாலும் கூட செல்போனையும் பயன்படுத்துகிறேன். அதை பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை. செல்போனை பயன்படுத்துவதால் மகிழ்ச்சியாக உள்ளது. அதே சமயம் சில சமயங்களில் அவுட்டோர் செல்லும்போது சிக்னல் கிடைக்கவில்லை என்றால் ரொம்ப வெறுப்பாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.