ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது சலார் மற்றும் தி ஐ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் அவ்வப்போது காதலருடனான புகைப்படங்களை வெளியிட்டு வருபவர். இசை, பாட்டு என பிஸியாகவும் உள்ளார். ஏற்கனவே தனது உடலில் தனது பெயரை தமிழில் பச்சை குத்தி உள்ளார் ஸ்ருதி. தற்போது அதன் அருகே முருகனின் வேலை டாட்டூவாக வரைந்திருக்கிறார்.
அது குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில், ‛‛பச்சை குத்துவதை நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். அந்த வகையில் ஆன்மிகம் சம்பந்தமான பச்சை குத்த வேண்டும் என்று நினைத்தபோது முருகப்பெருமானின் ஞாபகம் தான் வந்தது. முருக பெருமானின் வேலுக்கு என் இதயத்தில் எப்போதுமே ஒரு இடம் உண்டு. அதனால் தான் டாட்டூ மூலம் எனது பக்தியை வெளிப்படுத்தியுள்ளேன். அதோடு ஆன்மிகமானது என்னை பாதுகாப்பாகவும் அடக்கமாகவும் வைத்திருப்பதற்கு உதவுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.