டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கில் பிஸியான முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இன்னொரு பக்கம் தனது நண்பரும் காதலருமான சாந்தனு ஹசாரிகவுடன் லிவிங் டுகெதர் முறையில் வசித்து வருகிறார். 35 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் குறித்து எந்தவித தகவலையும் ஸ்ருதிஹாசன் வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் புகைப்பட கலைஞர் ஒருவர் ஸ்ருதிஹாசனும் சாந்தனுவும் திருமணம் செய்து கொண்டார்கள் என ஒரு பதிவை சோசியல் மீடியாவில் வெளியிட்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், “நான் என்னுடைய வாழ்க்கை முறையை எப்போதுமே உங்களிடம் ஒளிவு மறைவாக வைத்ததில்லை. கல்யாணம் என்றால் சொல்லாமலா இருக்கப் போகிறேன் ? நிச்சயமாக சொல்லிவிட்டுத்தான் செய்வேன். இந்த செய்தியை பரப்பும் யாரோ ஒருவர் இதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட புகைப்படக்காரர் ஒரு நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசனை புகைப்படம் எடுத்தபோது தன்னிடம் அவர் கடுமையாக நடந்து கொண்டார் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதனால் அவர் மீது உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் இது போன்ற தகவலை அவர் பரப்பியுள்ளார் என்றே சொல்லப்படுகிறது.




