ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

ரஜினி , கமல் ஆகிய இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தை 'கூலி' படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அதையடுத்து ரஜினி மீடியாக்களை சந்தித்தபோது, கமலுடன் மீண்டும் இணைந்து நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாகவும் அதற்கான கதை, இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை என்றும் ஒரு செய்தி வெளியிட்டிருந்தார். அதன்மூலம் அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை என்பது தெரியவந்தது.
இந்தநிலையில் ஒரு விருது விழா நிகழ்ச்சியில் ரஜினியின் இளைய மகளான இயக்குனர் சவுந்தர்யா ரஜினி அப்படம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய ஜாம்பவான்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் விரைவில் ஒரு படத்தில் இணைய உள்ளார்கள். ஆனால் அந்த மெகா படத்தை யார் இயக்குவார்கள் என்பது தெரியவில்லை. அந்த விபரங்கள் அனைத்தும் தற்போது செயல்பாட்டில் உள்ளன. சரியான நேரத்தில் அந்த படம் குறித்து அறிவிப்பார்கள்'' என்று கூறினார்.
அதை அடுத்து அதே மேடையில் இருந்த கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், ''மீண்டும் அவர்கள் இருவரையும் நாங்கள் ஒன்றாக பார்க்க வேண்டும் என்று கனவு கண்டோம். எல்லோரையும் போலவே அந்த ஒரு படத்திற்காக நாங்களும் காத்திருக்கிறோம்'' என்று கூறிய ஸ்ருதிஹாசன், ''ரஜினி சாரின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது படையப்பா. அவருடன் கூலி படத்தில் இணைந்து நடித்ததால் நான் மகிழ்ச்சி அடைந்தேன்'' என்றும் தெரிவித்திருக்கிறார்.




