பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சின்னத்திரையில் சீரியல்கள் நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவர் சரண்யா துராடி. ஆரம்பத்தில், செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த சரண்யா துராடி, அதன் பின்னர் வைதேகி காத்திருந்தாள் உள்பட பல தொடர்களில் நடித்து புகழ்பெற்றார்.
நடிகைகள் மாலத்தீவுக்கு சென்று பிகினி உடையில் போஸ் கொடுத்து வரும் சூழ்நிலையில் காசிக்கு புனித பயணம் சென்று வந்திருக்கிறார் சரண்யா துராடி. அந்த படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அவர் எழுதியிருப்பதாவது: வயதான பிறகு தான் காசிக்கு செல்ல வேண்டும் என பலரும் கூறுகிறார்கள். ஆனால், ஏதோ ஒரு தீவில் கவர்ச்சியான விடுமுறையை கழிப்பதற்கு பதிலாக, கங்கை நதியில் கழிக்க நினைத்தேன்.
காசி படித்துறையில் இறங்கி காலாற நடந்தால்.. ஒரு பக்கம் 24 மணி நேரமும் எரியும் பிணங்கள். அப்படியே திரும்பினால் கலர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகில் உற்சாகமாக 'சிவ சம்போ' கோஷம் போடுற யாத்ரீகர்கள். சுற்றி இருக்கும் எதை பற்றியும் அக்கறை இல்லாமல், இன்னொரு உலகில் வாழும் தேசாந்திரிகள். அசுத்தமாக இருந்தாலும் புண்ணியம் என்று கங்கை நதி நீரை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து ஊருக்கு பார்சல் கட்டும் சுற்றுலா பயணிகள்.
கங்கை ஆரத்தி நடந்த போது அங்கே படகுகளிலும் படித்துறையிலும் அமர்ந்து தரிசித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே குரலாக முழங்கிய போது ஒரு எனர்ஜி இருந்ததை மறுக்க முடியாது. எதையாவது பிடித்து கொண்டு இந்த பிறவியை கடந்திட மாட்டோமா என்ற தவிப்பு தான் பக்தியாக வெளிப்படுகிறது. எதை நம்புகிறோம் என்பது ஒருத்தருக்கு ஒருத்தர் மாறுபடுகிறது. ஆனால் நம்பிக்கை என்னவோ ஒன்றுதான். என்று பதிவிட்டிருக்கிறார். இளம் நடிகையான சரண்யாவின் இந்த ஆன்மீக பதிவு பலரையும் கவர்ந்துள்ளது. அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.