மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
ஒரு ஆன்மிக படம், அதுவும் அனிமேஷனில் உருவான பக்தி படம் இவ்வளவு கோடி வசூலை அள்ளுமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு மகாவதார் நரசிம்மா படம், ரூ 210 கோடி வசூலை ஈட்டியிருக்கிறது. ஜூலை 25ம் தேதி வெளியான இந்த படத்துக்கு வரவேற்பு எப்படி இருக்குமோ என படக்குழு பயந்தனர். காரணம், அனிமேஷனில் உருவான ஆன்மிக படத்தை குழந்தைகள் படம் என ஒதுக்கிவிடுவார்களோ என யோசித்தனர்.
ஆனால் படத்தின் கரு, பக்தி பற்றி, நரசிம்மர், பிரகலாதன் பற்றி சொன்ன விஷயங்கள், அனிமேஷன் தரம், கிளைமாக்ஸ் மற்றும் இசை, திரைக்கதை போன்ற விஷயத்தால் இந்த படம் வெற்றி பெற ஆரம்பித்தது. 50, 100 கோடி என தொட்டு இப்போது 210 கோடியில் வந்து நிற்கிறது. இன்னும் பல கோடிகளை அள்ளும் என சொல்கிறார்கள்.
பல மொழிகளில் இந்த படம் வெளியானாலும் தெலுங்கு, இந்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் ஓரளவு வெற்றி. அடுத்து விஷ்ணுவின் பல அவதாரங்களை அனிமேஷனில் சொல்லப்போகிறோம். அடுத்து மகாவதார் பரசுராம் வரப்போகிறார். அவரை தொடர்ந்த மற்ற அவதாரங்கள் வரும் என்கிறார் இயக்குனர் அஸ்வின். இந்த படத்தை கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே வெளியிட்டதால் கூடுதல் வரவேற்பு, பப்ளிசிட்டி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.