முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
ஒரு ஆன்மிக படம், அதுவும் அனிமேஷனில் உருவான பக்தி படம் இவ்வளவு கோடி வசூலை அள்ளுமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு மகாவதார் நரசிம்மா படம், ரூ 210 கோடி வசூலை ஈட்டியிருக்கிறது. ஜூலை 25ம் தேதி வெளியான இந்த படத்துக்கு வரவேற்பு எப்படி இருக்குமோ என படக்குழு பயந்தனர். காரணம், அனிமேஷனில் உருவான ஆன்மிக படத்தை குழந்தைகள் படம் என ஒதுக்கிவிடுவார்களோ என யோசித்தனர்.
ஆனால் படத்தின் கரு, பக்தி பற்றி, நரசிம்மர், பிரகலாதன் பற்றி சொன்ன விஷயங்கள், அனிமேஷன் தரம், கிளைமாக்ஸ் மற்றும் இசை, திரைக்கதை போன்ற விஷயத்தால் இந்த படம் வெற்றி பெற ஆரம்பித்தது. 50, 100 கோடி என தொட்டு இப்போது 210 கோடியில் வந்து நிற்கிறது. இன்னும் பல கோடிகளை அள்ளும் என சொல்கிறார்கள்.
பல மொழிகளில் இந்த படம் வெளியானாலும் தெலுங்கு, இந்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் ஓரளவு வெற்றி. அடுத்து விஷ்ணுவின் பல அவதாரங்களை அனிமேஷனில் சொல்லப்போகிறோம். அடுத்து மகாவதார் பரசுராம் வரப்போகிறார். அவரை தொடர்ந்த மற்ற அவதாரங்கள் வரும் என்கிறார் இயக்குனர் அஸ்வின். இந்த படத்தை கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே வெளியிட்டதால் கூடுதல் வரவேற்பு, பப்ளிசிட்டி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.