துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் |
சர்வைவர் ஷோவில் கலந்து கொண்ட ஸ்ருஷ்டி டாங்கே தான் எலிமினேட் ஆனதை குறித்து எமோஷனலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சர்வைவர் ஷோவில் இருந்து எலிமினேட் ஆன காய்த்ரி மற்றும் ஸ்ருஷ்டிக்கு தனியாக போட்டி வைக்கப்பட்டது. இதில் ஸ்ருஷ்டி தோற்றுவிட்ட நிலையில் நிகழ்ச்சியிலிருந்து முழுவதுமாக வெளியேறியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாவில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், 'டிவியில் நீங்கள் பார்ப்பது மிக குறைவு தான். கற்கால மனிதன் போல வாழ்வது எளிதல்ல. சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு இப்படி ஒரு ஷோவுக்கு சென்றால் உங்கள் உடல், மனம் மீது அது பாதிப்பை ஏற்படுத்தும். நான் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை என்றாலும் போட்டியை சரியான இடத்தில் முடித்து இருக்கிறேன். நான் சர்வைவர் ஷோவில் இருந்து எலிமினேட் ஆனதை தோல்வியாக பார்க்கவில்லை. பெரிய வாய்ப்பை தொலைத்துவிட்டேன். இந்த வாய்ப்பு அளித்த ஜீ தமிழ் மற்றும் அர்ஜூன் சார் ஆகியோருக்கு நன்றி' என அதில் அவர் கூறியுள்ளார்.